கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிதாரிகள் இருவர் பொலிசாரினால் சுட்டுப்படுகொலை

2 months ago



கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிதாரிகள் இருவர் பொலிசாரினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொட்டாஞ்சேனையில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஒருவரை சுட்டு படுகொலை செய்து பின் தப்பிச் சென்ற துப்பாக்கிதாரிகளை பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்த போது, ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த இடத்தினை காண்பிப்பதாக பொலிஸாரை அழைத்துச் சென்று பொலிசாரிடம் இருந்த ஆயுதங்களைப் பறித்து சுட முயன்ற வேளையில் பொலிசார் இருவரையும் சுட்டுக்கொன்றதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


அண்மைய பதிவுகள்