பிபிசி ஆனந்தி உயிர் பிரிந்தார்

2 months ago


பிபிசி ஆனந்தி உயிர் பிரிந்தார்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை நேர்காணல் செய்த ஆனந்தி உலகப் புகழ் பெற்றார்.

கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பி.பி.சி தமிழோசையில் பணிபுரிந்து வந்த மூத்த தயாரிப்பாளர் ஆனந்தி சூர்யப்பிரகாசம் பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

1970 களில் பகுதி நேர தயாரிப்பாளராக பணி புரியத் தொடங்கிய ஆனந்தி 80 களில் முழு நேரத் தயாரிப்பாளரானார்.

இவரது பல தொடர்கள், முக்கிய நபர்களுடனான பேட்டிகள் போன்றவை தமிழோசை நேயர்களிடையே பிரபலம் அடைந்தன.

இலங்கை யாழ்.குடாநாட்டின் சாவகச்சேரியைச் சேர்ந்த ஆனந்தி, தன் பணியில் காத்திரமாக செயற்பட்டவராவார்.

தன் பணியில் மிகச் சிறப்பாக அமைந்ததற்காக தமிழோசை நேயர்களுக்கும் அவர் தன் நன்றியைத் தெரிவித்திருந்தார்.


 

  

அண்மைய பதிவுகள்