யாழ்.கோப்பாயில் இறுதி ஊர்வலத்தில் கலந்தவர்கள் மீது வாகனம் மோதியதில் ஆறு பேர் காயமடைந்தனர்

2 months ago



யாழ்ப்பாணத்தில் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் மீது வாகனம் மோதியதில் ஆறு பேர் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பகுதியில் அண்மையில் உயிரிழந்தவரின் இறுதி கிரியைகள் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்று தகன கிரியைக்காக பூதவுடலை கோப்பாய் - கைதடி வீதியில் உள்ள இந்து மயானத்திற்கு எடுத்து சென்றவர்கள் மீது வீதியால் மிக வேகமாக வந்த வாகனம் மோதி தள்ளி விட்டு, அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளது.

குறித்த விபத்தில் காயமடைந்தவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

அவர்களில் இருவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஏனைய நால்வரும் விடுதிகளுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், தப்பிச் சென்ற வாகனத்தினை கண்காணிப்பு கமராக்களின் காணொளிகள் அடிப்படையில் தேடி வருகின்றனர்.


அண்மைய பதிவுகள்