இலங்கை ஹிக்கடுவை கடற்கரையில் நீராடச் சென்ற கனடாவைச் சேர்ந்த ஒருவர் காணாமல் போனதாக பொலிஸார் தெரிவிப்பு
3 months ago

இலங்கை ஹிக்கடுவை கடற்கரையில் நீராடச் சென்ற கனடாவைச் சேர்ந்த பிரஜை ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்தனர்.
19 வயதான கனேடியர் ஒருவரே காணாமல் போனவர் ஆவார்.
இவர் குளிக்கச் சென்ற இடத்தில் அபாய பதாகை வைக்கப்பட்டு இருந்த நிலையில், அதைப் பொருட்படுத்தாமல் கடலில் குளிக்கச் சென்றமை ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்தது.
காணாமற்போன நபரை தேடும் பணியில் பொலிஸாரின் உயிர்காக்கும் படையினரும் கடற்படையின் உயிர்காக்கும் படையினரும் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
