ஆண்டுக்கு சுமார் 3 இலட்சம் நாய் கடி சம்பவங்கள்.-- கால்நடை சுகாதார சேவை வைத்திய அதிகாரி யேஷான் குருகே தெரிவிப்பு

இலங்கையில் ஆண்டுக்கு சுமார் 3 இலட்சம் நாய் கடி சம்பவங்கள் பதிவாவதாக பொதுச் சுகாதார கால்நடை சுகாதார சேவை வைத்திய அதிகாரி யேஷான் குருகே தெரிவித்தார்.
கடந்த ஆண்டில் மட்டும் சுமார் இரண்டு இலட்சம் மனித விசர் நாய்க்கடி தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், கடந்த வருடம் ரேபிஸ் நோயினால் 20 பேர் உயிரிழந்ததாகவும், இதில் 11 பேர் விசர் நாய் கடியால் உயிரிழந்ததாக அவர் கூறினார்.
மீதமுள்ள 8 இறப்புகளில், விலங்கு தெளிவாக அடையாளம் காணப்படவில்லை.
இவ்வாறு, நடுத்தர வயதுடையவர்கள் அதிகமாக விலங்கு கடிக்கு உள்ளாவதாகவும், அவர்களில் 2 பேரில் ஒருவர் ஆண்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நாய்க்கடி அதிகமாகப் பதிவாகியிருந்தாலும், கடந்த பத்து வருடங்களில் படிப்படியாகக் குறைந்துள்ளது. இருப்பினும், குரங்கு கடி அதிகரித்துள்ளது.
மனித ரேபிஸ் தடுப்பூசிகளுக்காக வருடாந்தம் 600 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பணம் செலவிடப்படுவதாக மருத்துவர் யேஷான் குருகே தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
