இந்தியாவில் அகதிகளாக தங்கியிருக்கும் இலங்கையர்களின் நுழைவுக்கான தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது

உள்நாட்டு போரின் போது நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் அகதிகளாக தங்கியிருக்கும் இலங்கையர்களின் நுழைவுக்கான தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அதற்காக தற்போதுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களைத் திருத்துவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
போரின்போது, வடக்கில் வாழ்ந்த மக்கள் பாதுகாப்புக்காக இந்தியாவின் தமிழ்நாட்டுக்கு தப்பிச் சென்று தற்போது இந்தியாவில் உள்ள அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர்.
இவர்கள் இலங்கைக்கு திரும்புவதற்கு தற்போதுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்கள் தடையாக இருப்பதால், அவற்றைத் திருத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எனவே, இதற்காக விரைவில் அமைச்சரவைப் பத்திரம் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
இதற்கிடையில், இந்தியா வில் இருந்து கடல் வழியாக இந்த நாட்டுக்கு வந்த ஒரு சிறு குழந்தை உட்பட மூன்று பேர் தலைமன்னார் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் இந்தியாவின் இராமேஸ்வரத்திலிருந்து கடல் வழியாக நாட்டுக்கு வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
24 வயதுடைய தம்பதியினரும் மூன்றரை வயது குழந்தையும் நாட்டுக்கு இவ்வாறு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர்கள் 2023 மே மாதம் படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது.
அண்மைய பதிவுகள்

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.

வடக்கில் போதைக்கு அடிமையான சிறுவர், சிறுமிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கட்டுப்படுத்த முடியாமல் திணறும் அதிகாரிகள்

யாழ்.மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் சர்வதேச சூழல் தினமும், சர்வதேச நீர் தினப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் கௌரவிப்பும்
