யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.








யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
தகவல் அறியும் சட்டமூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு இப்படி பதில் தந்திருக்கிறார். தகவல் அறியும் சட்டமூலம் கேட்கப்பட்ட சில கேள்விகளுக்கு பதில் தரமறுத்துவிட்டார்.
வாழைப்பழம் ஏற்றுமதி செய்த விபரப் பட்டியல்? Fresh Field, Dole Lanko, Ceylon Traders, wealthy Traders
எத்தனை விவசாயிகளிடம் இருந்து வாழைக்குலை கொள்வனவு செய்யப்படுகிறது? 90 விவசாயிகள்
விவசாயிகளிடம் என்ன விலைக்கு வாழைப்பழம் கொள்வனவு செய்யப்படுகிறது? 80 ரூபாய் தொடக்கம் 90 ரூபாய் வரை
இதனால் இலாபம் பெற்ற இலாபப் பங்கீடு விபரப் பட்டியல்? இலாபம் கிடைக்கப்பெறவில்லை.
இதுவரை காலம் எத்தனை மெற்றிக் தொன் ஏற்றுமதி செய்யப்பட்டது?
இவ்வருடம் கட்டாருக்கு 6250 கிலோ, 6360 கிலோ ஏற்றுமதி
நிரந்தரப் பணியாளர்கள் எத்தனை பேர்? 3 பேர்
ஏற்றுமதி செய்யப்பட்ட இலாபத்தில் விவசாயிகளுக்கு எவ்வளவு இலாபம் கிடைக்கும்?
இதுவரை எத்தனை முறை ஏற்றுமதி செய்யப்பட்டது? 5 தடவைகள் ஏற்றுமதி செய்யப்பட்டது.
வாழைக்குலை வெளிக்கடையை விட இங்கு இலாபம் கிடைக்குமா? ஆம்
சந்தை விலையை விட 10 ரூபாய், அல்லது 15 ரூபாய் அதிக விலைக்கு கொள்வனவு செய்கிறோம்.
விவசாய உற்பத்திப் பொருள்கள் இந்த அமைப்பின் ஊடாக வழங்கப்பட்டதா? என்னென்ன பொருள்கள் வழங்கப்பட்டன? ASMP ஊடாகவே உள்ளீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையம் எவ்வளவு காலம் தொடர்ந்து நடக்கிறது? 2022 இலிருந்து 2025
எவ்வளவு முதலீடு செய்யப்பட்டது வருவாய் எவ்வளவு?
பொறுத்த கேள்விகளுக்கு பதில் இல்லை.
இந்த நிறுவனத்தில் சமீபத்தில் 5 ஏணிகள், ஒரு மோட்டர் களவு போயிருக்கிறது. முகாமையாளர் மீது பழி சுமத்தியிருக்கிறார்கள். களவு போன அறைத் திறப்பு 3 பேரிடம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஊழல் நிறைந்த இந்த நிறுவனத்தின் மீது விசாரணை வேண்டும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில் யாழ்.தினக்குரல் பத்திரிகையில் "விவசாயிகளின் தலையில் போடப்படும் சுமை" என்ற கட்டுரையில் இந்த நிறுவனத்தின் தலைவர் இலாபம் இல்லை என்று தான் தெரிவிக்காமல் போட்டிருக்கு, என்று சொல்லி தினக்குரல் அலுவலகம் வந்து கட்டுரைக்கு மறுப்பும் போடப்பட்டது. ஆனால் தகவல் அறியும் சட்ட மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு இலாபம் இல்லை என்று பதில் தந்திருக்கிறார்.
இந்த நிறுவனம் ஊழல் நிறைந்த நிறுவனம் என்பதை சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் விசாரணை செய்து வலிகாமம் கிழக்கு வாழை செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்துங்கள்.
அண்மைய பதிவுகள்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் சீ.வீ.கே.சிவஞானமும் கே. என். டக்ளஸ் தேவானந்தாவும் பேச்சு

யாழ்.செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழியில் 18 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்

யாழ்.தையிட்டியில் சட்டவிரோதமாக திஸ்ஸ விகாரையில் வழிபாட்டுக்கு ஆயிரக்கணக்கான சிங்கள மக்களைக் கொண்டுவர முயற்சி

யாழ்.நிலாவரை வாழைப்பழம் ஏற்றுமதி நிலையத்தால் ( Jaffna Organics Farmers Company Ltd) இலாபம் இல்லை என்று அதன் தலைவர் ரகுநாதன் தெரிவிப்பு.
